ஜீ தமிழின் ‘பூவே பூச்சூடவா” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா. இந்த சீரியலில் நடிக்கும் போதே இவருக்கும், மதன் என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. மேலும் தங்களுக்குள் இருக்கும் காதலை தங்களின் ரசிகர்களுக்கு அறிவித்து கூடிய விரைவில் திருமணம் என்ற குட் நியூஸை கொடுத்திருந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் படி கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இருவரும் பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்கள் marriage செய்து கொண்ட பிறகு ”abi tailor” என்ற சீரியலில் ஜோடியாக நடித்து அசத்தி வந்தனர். இதுபோக ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் வரவிருக்கும் கிழக்கு வாசல் என்ற நியூ சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
TET தேர்வர்களே., இனி தேர்வு வாரியம் அலைய தேவையில்லை?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர்கள் திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்கள் சிலவற்றை முரளி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் துளசி மாலையை கோவிலில் வைத்து மாற்றி கொண்ட இவர்களின் புகைப்படத்தின் கீழ் ‘once again’ என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்னடா இது மீண்டும் 2 வது முறையாக இவர்களுக்கு திருமணமா என குழம்பும் அடைந்துள்ளனர்.