நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இது தான் காரணமா?? ஆர்டிஓ 16 பக்க விசாரணை அறிக்கை!!

0
"அவசர பட்டு இப்படி பண்ணிக்கிட்டேன்" - மன்னிப்பு கேட்ட விஜே சித்ரா ஆவி! என்ன காரணம் தெரியுமா??

சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த வழக்கை விசாரித்த ஆர்டிஓ அதிகாரி விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். மிகவும் துணிச்சலானவர் என்று அனைவர்க்கும் தெரிந்த விஷயம். இவர் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் கடந்த 9ம் தேதி அன்று பூந்தமல்லி அருகே உள்ள பழஞ்சூர் தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் போலீசார். மேலும் தற்கொலைக்கு தூண்டிய காரணத்தினால் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ஆர்டிஓ அதிகாரி திவ்யஸ்ரீ விசாரித்து வந்தார். கடந்த 14ம் தேதி அன்று விசாரணையை துவங்கிய அவர் சித்ராவின் தந்தை, தாய் சகோதரன் சகோதரி என அனைவரிடமும் விசாரணை நடத்தினார். மேலும் ஹேமந்த் மற்றும் ஹேமந்த்தின் தந்தையிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தார். அவர்களை தொடர்ந்து சித்ராவின் சக நடிகர்கள் என மொத்தம் 15 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளார்.

#சிட்னி டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு?? வெளியான தகவல்!!

இவர்களிடம் விசாரணை நடத்திய திவ்யஸ்ரீ 16 பக்க விசாரணை அறிக்கையை போலீசாரிடம் தாக்கல் செய்துள்ளார். விசாரணையின் முடிவில் ஆர்டிஓ அதிகாரி திவ்யஸ்ரீ கூறுகையில் சின்னத்திரை நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையினால் தற்கொலை செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். தற்போது அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று மக்களும் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here