‘நீ செத்துத் தொலை’ சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய ஹேம்நாத் – நள்ளிரவில் அதிரடி கைது!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக தனி அறையில் வைத்து தீவிர விசாரணை செய்து வந்த போலீசார், தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன.

சித்ரா தற்கொலை:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சித்ரா. இவருக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் பலர். சமூக வலைத்தளங்களில் ‘சித்ரா ஆர்மி’, ‘முல்லை ஆர்மி’ என ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்னையில் சூட்டிங்கை முடித்து விட்டு நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கணவருடன் தங்கி இருந்த சித்ரா அதிகாலை 3.30 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உளவியலில் பட்டப்படிப்பு முடித்து தனி ஒரு பெண்ணாக சின்னத்திரையில் சாதித்த சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையில்லை, இது கொலை தான் என பலரும் கூறி வந்தனர். அவருக்கும், ஹேம்நாத்துக்கும் ஏற்கனவே பதிவு திருமணம் முடிந்து விட்ட நிலையில் வழக்கு விசாரணை ஆர்டிஓ.,விடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ஹேம்நாத், அவரது பெற்றோர் மற்றும் சித்ராவுடன் நடித்த துணை நடிகர்கள், அவரின் பெற்றோர் என அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதன் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளியாகி உள்ளன. சித்ரா சொகுசு கார் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் ஏகப்பட்ட கடன் வாங்கியதாகவும், அதை செலுத்துவதற்காக கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி சீரியல்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் குடும்ப செலவுகளையும் சுமந்து வந்த சித்ரா தொழிலதிபர் ஹேம்நாத்தை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இது சித்ராவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

chithra
chithra

இருப்பினும் திருமண ஏற்பாடுகளை சித்ரா தனி ஒரு ஆளாக செய்து வந்துள்ளார். கணவர் ஹேம்நாத்திடம் இருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி சித்ரா பிற நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை விரும்பாத ஹேம்நாத் அடிக்கடி குடித்து விட்டு சந்தேக கண்ணோட்டத்தில் சண்டையிட்டு உள்ளார். இதன் காரணமாக சித்ரா ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த 9ம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய சித்ராவிடம் ஹேம்நாத் மீண்டும் சண்டையிட்டு உள்ளார். ‘எந்த நடிகருடன் நடனமாடினாய்’ என தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா, நான் உன்னை தான் முழுசாக நம்பி உள்ளேன், நீ இல்லாமல் இருக்க முடியாது என கூறியுள்ளார். இதனை பொருட்படுத்தாத ஹேம்நாத் ‘செத்துத் தொலை’ என கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னரே சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக ஹேம்நாத் நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here