சின்னத்திரையில் ஹீரோ ஹீரோயினாக நடித்த பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா. ஆனால் அவர்களின் திருமணம் வாழ்க்கை ஒரு ஆறு மாசம் கூட நிலைக்கவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் அவர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தார்கள்.. இந்நிலையில் விஷ்ணு காந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எல்லாருக்கும் வணக்கம். ஒரு நபரை நம்பி எனது திருமண வாழ்க்கையை தொடங்கினேன்.
கொஞ்சம் நாட்களில் எனக்கு நல்ல புத்தி கொடுத்து அந்த நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய அந்த இறைவனுக்கு நன்றி. மேலும் எனக்கு ஆறுதலாக இருந்தவர்களும், நான் எந்த தவறும் செய்திருக்க மாட்டேன் என்று என்னை நம்பிய அனைவருக்கும் என்னுடைய நன்றி.
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., இதை கட்டாயம் செஞ்சுடுங்க.., வெளியான அறிவிப்பு!!
அதுமட்டுமன்றி நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை உடைக்கும் விதமாக யாராவது முன் வந்தால் அவர்களையும் வெள்ளாமல் விடமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த போஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.