விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நடித்து வருபவர் தான் சம்யுக்தா. இவர் யூடியூப்பில் பல சீரிஸ்களில் நடித்து பிரபலமானார். நிறைமாத நிலவே சீரியல் தான் இவருக்கு அதிகளவு பேமஸை பெற்று கொடுத்தது. மேலும் யூடியூப் செலிபிரிட்டியாக இருந்த இவருக்கு விஜய் டிவியில் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதில் தன்னுடன் இணைந்து நடித்த விஷ்ணுகாந்த என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மார்ச் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் இப்பொழுது, விவகாரத்தில் வந்து முடிந்துள்ளது. விஷ்ணுகாந்த் இது குறித்து இன்டெர்வியூ கொடுத்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தாவும் இன்ஸ்டா லைவில் பேசியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது விஷ்ணுகாந்த் தன்னை கொடுமை படுத்தியதாகவும், ஒவ்வொரு விஷயத்திற்கு தன்னை கஷ்டப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் விஷ்ணுகாந்த் வீட்டில் எந்த பொருளுமே இருக்காது. நான் கல்யாணம் செய்து கொண்டு போய் தான் எல்லாத்தையும் கொடுத்தேன். சோபா, மிக்சி, வாஷிங் மெஷின், 10 சவரன் நகை எல்லாமே கொடுத்து தான் வீட்டுல அனுப்புனாங்க என்று கண்கலங்க கூறியுள்ளார்.