பப்லுக்கு வந்த இது கண்டிப்பா எனக்கும் வரும்., 2ம் மனைவி ஷீத்தல் கொடுத்த பரபரப்பு பேட்டி!!

0
பப்லுக்கு வந்த இது கண்டிப்பா எனக்கும் வரும்.,2ம் மனைவி ஷீத்தல் கொடுத்த பரபரப்பு பேட்டி!!
பப்லுக்கு வந்த இது கண்டிப்பா எனக்கும் வரும்.,2ம் மனைவி ஷீத்தல் கொடுத்த பரபரப்பு பேட்டி!!

பிரபல சீரியல் நடிகர் பப்லு பிருத்விராஜ், இரண்டாவதாக திருமணம் செய்துள்ள இள வயது பெண் ஷீத்தல், தன் கணவரின் நிலை குறித்து பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பரபரப்பு பேட்டி:

சன் டிவி சீரியல் நடிகர் பப்லு ப்ரித்விராஜ், சமீபத்தில் 2ம் திருமணம் செய்து கொண்டார். 56 வயதான இவர், 24 வயது இளம் பெண்ணை, திருமணம் செய்து கொண்டது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை சந்தித்தது. இதுபோக, பப்லு மற்றும் ஷீத்தல் இருவரும் சேர்ந்து முன்னணி சோசியல் மீடியாக்களில் பேட்டியும் கொடுத்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி தனியார் சேனல் ஒன்றுக்கு, இருவரும் சேர்ந்து தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர். அப்போது பப்லு, சகோதரி திருமண நிகழ்ச்சி ஒன்றில், ஷீத்தலை பார்த்ததாகவும் அவரை அப்போது, அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது கேர்ள் ஃபிரண்ட் என சொல்லாமல் மனைவி என அறிமுகப்படுத்தி வைத்தேன். அதுவே எங்கள் சந்திப்புக்கு, மிகப்பெரிய அச்சாரமாய் அமைந்துவிட்டது எனக் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஷீத்தல், இப்போ பப்லுவுக்கு வயசாகிவிட்டது, இவ்ளோ வயசு வித்தியாசத்தில் ஏன் கல்யாணம் பண்ண? என பலரும் கேட்கின்றனர். பப்லு மாதிரியே கண்டிப்பா எனக்கும் ஒரு நாள் வயசாகும், நரை முடி வரும். இதை யாராலும் தடுக்க முடியாது, எங்களுக்குள்ள இருக்க காதல மட்டும் யாரும் பார்க்க மாட்டாங்க என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here