இந்த தேதிக்குள் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு உத்தரவு!!

0

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் தற்போது வெகுவாக குறைந்து உள்ளதால் தமிழக மாநில அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது. கிட்டத்தட்ட சுமார் 25 கோடி மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பத் தயார் நிலையில் உள்ளனர்.

இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. மாணவர்கள் மற்றும் சக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பள்ளிப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

நாடு முழுவதும் உள்ள 90 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி இயக்கத்தில் முன்களப் பணியாளர்களாக சேர்க்கப்படாத நிலையிலும், இதுவரை 50 விழுக்காடு பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இருப்பினும், செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here