தமிழகத்தில் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அவரது சொந்த ஊரான ராமநாதபுர மாவட்டத்தில் அனுசரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தற்போது இதை தொடர்ந்து சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 23ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு., இந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும்? அதிகாரபூர்வ அறிவிப்பு!!!