விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த செந்தூர பூவே சீரியலில் தற்போது ஜீ தமிழ் நடிகை களமிறங்கியுள்ளார். மேலும் பிளாஷ் பேக் சீன் ஒளிபரப்பாகவுள்ளது.
செந்தூரப்பூவே
செந்தூர பூவே சீரியலில் தற்போது துரைசிங்கத்தின் பிளாஷ் பேக் சீன் ஒளிபரப்பாகவுள்ளது. துறை சிங்கத்தின் மகள் கயல் அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து கொண்டே இருந்தார்.
மேலும் ரோஜாவை கயலுக்கு மிகவும் பிடித்து போக அவரை அம்மா என்றே அழைத்து வந்தார். அதன் பிறகு தான் வீட்டில் உள்ள அனைவரும் பேசி ரோஜாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.
தற்போது ரோஜா வீட்டின் மருமகளாக அனுசரித்து நடந்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக சிலரை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது துறை சிங்கத்தின் நிஜ மனைவியான பிரியா ராமன் இந்த சீரியலில் பிளாஷ் பேக் சீனில் கலந்துகொள்ள உள்ளார்.
இதனால் இந்த சீரியலுக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே இவர் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து விஜய் டிவியில் நடிப்பாரா?? அல்லது செம்பருத்தி சீரியலில் தான் நடிப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்