மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

0

கொரோனா ஊரடங்கு காரணமாக வர்த்தகம் வரலாறு காணாத அளவு பாதிப்படைந்த காரணத்தால் பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மீது முதலீடு செய்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறுகட்ட தளர்வுகள் வழங்கப்பட்ட காரணத்தால் வர்த்தகம் மீண்டும் முழுவீச்சுடன் செயல்பட தொடங்கி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Sensex
Sensex

தங்கம் & வெள்ளி இன்றைய விலை நிலவரம்!!

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது. இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்வுடன் தொடங்கி உள்ளது. சென்செக்ஸ் 303 புள்ளிகள் அதிகரித்து 44,473 ஆக காலை வர்த்தகம் தொடங்கி உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு என் நிப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 13,054 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here