கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் தற்போது அனைத்து மாநிலத்திலும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனைத்து வகையான தொழில்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்:
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் தற்போது பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அல்லது பகுதி நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலத்திலும் தொழில் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்தியாவில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பொருளாதார பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் சில பகுதிகளில் தொழில் துறைகள் நடந்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் சரிய வாய்ப்பிருக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.94 புள்ளிகள் உயர்ந்து 49,502.41 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119.20 புள்ளிகள் உயர்ந்து 14,924.35 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.