சவுரவ் கங்குலி தனிமைப்படுத்தப்பட்டார் – சகோதரருக்கு கொரோனா உறுதி..!

0

சகோதரர் சென்ஹாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து சவுரவ் கங்குலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

கங்குலி சகோதரருக்கு கொரோனா உறுதி..!

சென்ஹாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் உறுதியனை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள பெல்லி வ்யூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் புதிய முதலீடு – தமிழகம் முதலிடம்..!

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அவரது மனைவி மற்றும் மாமியன்பூர் இல்லத்தில் உள்ள மாமியார் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். மேலும் சகோதரர் மற்றும் வங்காள கிரிக்கெட் சங்க இணை செயலாளர் சென்ஹாஷிஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து முன்னாள் இந்திய கேப்டனும் பி.சி.சி.ஐ தலைவருமான சவுரவ் கங்குலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here