‘செம்பருத்தி’ சீரியலை விட்டு விலகிய அகிலாண்டேஸ்வரி – அவருக்கு பதில் யார் தெரியுமா?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி செம்பருத்தி சீரியலில் பிரபல கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரிக்கு பதிலாக அத்தி பூக்கள் பிரபலம் ராணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம்பருத்தி

செம்பருத்தி சீரியல் ஆரம்பத்தில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அதில் கார்த்தி, பார்வதி மற்றும் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அகிலாண்டேஸ்வரின் அந்த ஆதிக்கம் தான் அனைவரையும் கவர்ந்திழுத்தது. அப்படி இருக்க தற்போது பல நடிகர்கள் அந்த சீரியலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகின்றனர். அந்த சீரியலில் இருந்து மட்டுமல்ல ஜீ தமிழை விட்டே பலரும் வெளியேறி வருகின்றனர்.

சின்ன திரையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

அர்ச்சனா, மதன் ரேஷ்மா என பலரும் இந்த தொலைக்காட்சியை விட்டு வேறு சீரியலுக்கு தாவியுள்ளனர். அப்படி இருக்க செம்பருத்தி சீரியலில் கார்த்தி விலகியதை அடுத்து அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த ப்ரியா ராமனும் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ‘அத்தி பூக்கள்’ சீரியல் மூலம் வில்லியாக அறிமுகமான ராணி தற்போது இந்த சீரியலில் நடிக்க உள்ளார். அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here