தடுப்பூசி போட்டு கொண்ட செல்லூர் ராஜு – வைரலாகும் புகைப்படம்!!

0

இந்திய முழுவதும் தற்போது அனைத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கொரோனவிற்கான தடுப்பூசியை போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அமைச்சர் ஒருவர் கொரோனவிற்கான தடுப்பூசியை போட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

அனைத்து உலக நாடுகளும் தற்போது கொரோனாவில் இருந்து சற்று மீண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனவிற்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் அடுத்த கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் முதல் ஆளாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இவரை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு ஜூலை மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது.

சட்ட பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் – உயர்நீதிமன்றம் கருத்து!!

பின்பு அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்பு உடல்நலம் குணமாகி டிஸ்சார்க் செய்யப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here