பாதுகாப்பு நிரந்தர ஆணையத்திலும் இனி பெண்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள் என்ற உறுதியை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெண்கள் நியமனம்:
தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்புப்படை நிரந்தர ஆணையத்திற்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த தேர்வில், தகுதியான பெண்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவதில்லை என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற செயல்களில் பாலின பாகுபாடு கூடாது என்றும் பெண்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், பாதுகாப்பு படை நிரந்தர ஆணையத்திற்கு பெண்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். விரைவில் இவர்களும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான பிராமண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.கே.கவுல் இந்த முடிவு மிகவும் பாராட்டத் தகுந்தது என தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், மத்திய அரசு கேட்டுள்ள கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார். மேலும் இதனை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், இது பெண் உரிமையை நிலைநாட்டும் செயல் எனவும் புகழாரம் சூட்டினார். இதனை அடுத்து, இந்த வழக்கை வருகிற செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்