தமிழக மக்களே இது தெரியுமா? மருந்துகளை குறைந்த விலைக்கே வாங்கலாம்? முழு விவரங்கள்!!

0
தமிழக மக்களே இது தெரியுமா? மருந்துகளை குறைந்த விலைக்கே வாங்கலாம்? முழு விவரங்கள்!!
தமிழக மக்களே இது தெரியுமா? மருந்துகளை குறைந்த விலைக்கே வாங்கலாம்? முழு விவரங்கள்!!

கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் மருந்தகங்களை ஆய்வு செய்துவிட்டு பொதுமக்களுக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு மற்றும் உணவு:

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. அரசால் சிறப்பான திட்டங்கள் வகுக்க பட்டாலும் சில அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் சில இடங்களில் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர். தமிழக அரசு இதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவை ஆய்வு செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து சென்னையில் ரேஷன் கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கப்படுவதாக வந்த புகாரை ராதாகிருஷ்ணன் விசாரித்தார். மேலும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் “அமுதம் பல்பொருள் அங்காடி”யில் பொருட்களை பரிசோதித்தும் ஊழியர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் இந்த அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பு., ஜன.1 முதல் அமல்! ஸ்டாலின் அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து கூட்டுறவு மருந்தகங்களை ஆய்வு செய்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு விற்கும் மருந்துகள் இங்கு குறைந்த விலையில் தரமாக உள்ளதாகவும் நிறைய பொதுமக்களுக்கு இதை தெரியப்படுத்த வேண்டும்.” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here