2வது மனைவியால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டு கணவன் கொலை…! – உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பகீர் சம்பவம்  !!!

0

உத்தரப்பிரதேச மாநிலத்தில்   உள்ள ஷிகர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மவுல்வி வக்கீல் அஹ்மத் . இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணம் நடைபெற்று அந்த இரு பெண்களுடனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூன்றாவது திருமண ஆசை வரவே அதை 2 மனைவிகளிடம் கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவரின் இரண்டாவது மனைவி கணவனின்  பிறப்புறுப்பு துண்டித்து கொலை செய்துள்ளார். இந்த செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மவுல்வி வக்கீல் அஹ்மத் என்ற 57 வயது உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் பக்கத்தில் உள்ள ஷிகர்புர் என்ற ஒரு கிராமத்தில் தனது 2 மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு மதகுரு ஆவார். இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி தனது 2 மனைவிகளிடம் தன்னுடைய மூன்றாவது திருமண திட்டம் பற்றி கூறியுள்ளார். இதை அவர்கள் இருவரும் ஏற்க மறுப்பு எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர் . இருப்பினும் இதை எதையும் ஏற்காத மவுல்வி வகில் அஹ்மத் தன்னுடைய முடிவில் திடமாக இருந்திருக்கிறார்.

இதனிடையே அவரின் இரண்டாவது மனைவியான ஹஸ்ரா கடும் கோபத்தில் அவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்திருக்கிறார். இதனால் மவுல்வி வகில் அஹ்மத் ஹஸ்ராவை மிக மோசமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த ஹஸ்ரா ஜூன் 24ம் தேதி இரவு மவுல்வி வகில் அஹ்மத் தூங்கிய பிறகு, கத்தி ஒன்றை  வைத்து கணவனின் பிறப்புறுப்பை துண்டாக்கி இருக்கிறார். இதனால் அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்து உள்ளார்.

இந்த கொலையை மறைக்கும் நோக்கில் ஹஸ்ரா மற்றும் அவரின் உறவினர்கள் இறுதிச் சடங்குகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்தனர். இதனிடையே அண்டை வீட்டாருக்கு சந்தேகம் ஏற்படவே போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். அதன்பின் போலீஸ் விசாரித்ததை அடுத்து ஹஸ்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவனின்  பிறப்புறுப்பை 2வது மனைவியே துண்டித்த செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here