கொரோன நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் நோய்த்தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. சென்ற மாதம் முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
நவம்பர் 16ம் தேதியன்று பள்ளி திறக்கப்டும் என்று அரசு தெரிவித்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்தன. எனவே தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டு முடிவெட்டுக்க நினைத்தது. அதன்படி, பள்ளிகளின் மூலம் அனைத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. கருத்துக் கணிப்பின் போது அதிக படியான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.
சித்ரா மரணத்திற்கு ஹேமந்தும், அவரது தாயாருமே காரணம்!!
இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். அரசு நடத்திய ஆய்வின்படி, கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதாக தெரிகிறது. எனவே பள்ளிகள், தற்போது திறக்கப்படலாம் என்று கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், அவர் முதல்வர் இது குறித்து அனைத்து தரப்புகளில் நன்கு ஆலோசித்து முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.