தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இது குறித்து அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது. பொதுத்தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பதும் தள்ளிபோடப்பட்டது. பின் ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விருப்பத்தின் பெயரில் பெற்றோர்களின் சம்மதத்தோடு பள்ளிகளுக்கு அனுப்பலாம் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எப்போது பள்ளிக்கு செல்லலாம்? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுகள் நடைபெறுமா? இல்லை ரத்து செய்யப்படுமா? இல்லை பாடங்கள் குறைத்து தேர்வு நடத்தப்படுமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். கொரோனா நோய்க்கிருமியின் தாக்கம் குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் எனும் யூகங்கள் எழுப்பப்படுகிறது.

தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்குமா??

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் எதிர் கட்சியிலிருந்து அதிமுக கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடமும் கல்வியாளர்களிடமும் கலந்து ஆலோசனை செய்த பின்னரே அறிவிக்கப்படும் என்றார். மேலும் அவர், மக்கள் பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது, தேவையற்றவர்கள் அரசை விமர்சித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here