கொரோனா தொற்று அச்சம் – பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிய மாநில அரசு!!

0
தமிழக பள்ளிகளுக்கு பிப்.18 ம் தேதி முழு விடுமுறை ?? விரைவில் வெளியாகும் அதிரடி அறிவிப்பு!!
தமிழக பள்ளிகளுக்கு பிப்.18 ம் தேதி முழு விடுமுறை ?? விரைவில் வெளியாகும் அதிரடி அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், டிசம்பர் 1ல் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என திரிபுரா மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த தேதி திடீரென மாற்றப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு :

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன . இருப்பினும், நோய்த்தொற்று தற்போது குறைந்து உள்ளதால் சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை திறந்து மாணவர்கள் ஆசிரியர்கள் என வழக்கம் போல செயல்பட்டு வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், அதிகமாக பரவிய கொரோனா தொற்று காரணமாக மீண்டும் அனைத்து பள்ளி & கல்வி நிலையங்களையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் மட்டும் இன்றைய நிலவரப்படி 32,723 பேருக்கு கொரோனா உறுதி செய்ய்யப்பட்டிருக்கிறது. அதில் 31,742 பேர் குணமடைந்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 26ல் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தியது. மேலும், சுகாதார துறை வழிகாட்டுதலின் பேரில், தகுந்த முன்னேற்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாநில அரசு தனது முடிவை திடிரென மாற்றியுள்ளது. மேலும், 10 ,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பாடங்களை எடுக்க திட்டமிட்டிருக்கிறது. மேலும், நோய்த்தொற்று கட்டுக்குள் வரும் வரையில் இந்த முறையே நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here