தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு? – இன்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு!!

0

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் ஏப்ரல் 23 உடன் முடியும் நிலையில் ஊரடங்கு நீடிப்பது, பள்ளி மற்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பின்னர் மாநில அரசு எடுத்த தீவிர முயற்சிகளால் இந்த தொற்று பரவல் ஜூன் மாதத்தில் குறைந்தது. இதனால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை அறிந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதில் சில இடங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. முதலவர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று பல வார காலங்களாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இன்று இது பற்றி உயர் அதிகாரிகளுடனும் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது, பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பது, சுற்றுலா தளங்களை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here