அடுத்தடுத்து கொரோனாவின் பிடியில் சிக்கும் பள்ளி மாணவர்கள் – இன்று தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை!!

0

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று கண்டறியப்படும் வேளையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்ததை அடுத்து  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதாவது 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.  மாணவர்களும் இயல்பு நிலைக்கு திரும்பி பள்ளிக்கு சென்றனர்.

ஆனால் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னை, திண்டுக்கல், ஈரோடு, கோவை என பல மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here