தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று (செப்டம்பர் 1,2021) பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்து உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டனர்.
2020 ஆம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இடையில் முதல் அலை முடிந்த பிறகு சில காலம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாம் அலையால் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன.
தற்போது இரண்டாம் அலை கிட்டத்தட்ட முடிந்துள்ளதால் தமிழக அரசு பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் என்று உத்தரவிட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மாணவர்கள், மாணவியர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, பள்ளி சீருடையுடன் உற்சாகமாக பேருந்தில் பள்ளிகளுக்கு புறப்பட்டனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்