தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக கடந்த 10ம் தேதி பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிக வேகமாக பரவி வருவதால் இதனை தமிழக அரசு அறிவித்தது. மேலும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்புக்கு மே மாதம் 5ம் தேதி தொடங்க இருந்த பொது தேர்வை தேதி அறிவிக்காமல் ஒத்திவைத்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை மிக பாதுகாப்பாக நடத்தி முடித்தனர். இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை நேரடியாக எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை?? உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

இந்நிலையில் தற்போது பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த மறு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் அனைவரும் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் வீட்டில் இருந்தே மாணவர்களை வழிகாட்டுமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here