தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு:
தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்வி பள்ளிகள் மட்டும் தொடங்கப்பட்டு மாணாக்கர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டவது அலை மிக தீவிரமாக இருந்து வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் அவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு காலவரையற்ற விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வந்தது.
அஜித்தால் அவரது ரசிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – போலீசில் வழக்கு பதிவு!!
இதன் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கான செய்முறை தேர்வு கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி இன்று(ஏப்ரல் 22)உடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் மாணாக்கர்கள் இனி பள்ளிக்கு யாரும் வர வேண்டாம் என்றும் ஹால்டிக்கடை பெற்று கொண்டு நேரடியாக பொதுத்தேர்வை எழுதுமாறு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக மாணாக்கர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தேர்விற்கு தயாராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்படும்.