சேலத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு காதலர் தினத்தன்று ரோஜா பூ,சாக்லேட் கொடுத்து ப்ரொபோஸ் செய்த ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றம் தண்டனை:
சேலத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு காதலர் தினத்தன்று, இந்த பள்ளி தமிழ் ஆசிரியரான நிர்மல் பிரேம்குமார் அந்த மாணவிக்கு ரோஜா பூ,சாக்லேட் கொடுத்து கையை பிடித்து இழுத்து ப்ரோபஸ் செய்துள்ளார். இதனால் சக மாணவிகள் அந்த மாணவியை கிண்டல் செய்துள்ளனர். மேலும்,இதை வெளியில் சொல்ல கூடாது என கூறி சமூக அறிவியல் ஆசிரியரான லாரன்சு மாணவியை மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி,நடந்த சம்பவத்தை காவல் நிலையத்தில் புகாராக கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதாவது ஆசிரியர் நிர்மல் குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் தண்டனை வழங்கப்படும் எனவும், இரண்டாவது குற்றவாளியான ஆசிரியர் லாரன்சுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்