
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கற்பித்தல் வழங்க பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுகள் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசியலமைப்பின் அடிப்படை சட்டம் குறித்த விழிப்புணர்வுகளை தெரியப்படுத்த வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் தினந்தோறும் அரசியலமைப்பின் முகப்புரையை கட்டாயம் வாசிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் அடிப்படை சட்டத்தின் கொள்கைகள் மற்றும் இலட்சியங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.