கொரோனா மையங்களாக மாறும் கல்லூரி, தொழில் நிறுவனங்கள் – தமிழக அரசு அதிரடி!!

0
தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி? உயர்நீதிமன்றம் அரசுக்கு முக்கிய பரிந்துரை!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் இரண்டாவது அலை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை ஊரடங்கு மற்றும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு தற்போது 2 லட்ச தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா மையங்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி கொரோனா மையங்களை பராமரிக்க முதற்கட்டமாக ரூ.61 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கவனிப்பு மையங்களை நடைமுறைக்கு கொண்டு வர ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது இது குறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் விளக்கியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா கவனிப்பு மையங்களை அதிகரிக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை மீண்டும் கொரோனா மையங்களாக மாற்ற உரிய முறையை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா?? பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை!!

அது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர் உடன் இருந்தவர்களை அடுத்த 72 மணி நேரத்திற்குள் கண்டறிந்து ஆர்டி.பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி, பாதுகாப்பு கவசங்கள், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here