தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதி கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 9.40 லட்சம் பேரில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 27ம் தேதி முதல் துணைத் தேர்வு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு பொருட்களை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தாராபுரம் தேர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை கவுசல்யா (473 மதிப்பெண்), மதுமிதா (457 மதிப்பெண்), சவுந்தர்யா (408 மதிப்பெண்) ஆகிய மாணவிகள் பிடித்துள்ளனர்.
இவர்களின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையை அப்பகுதியில் உள்ள அனிதா டெக்ஸ்காட் நிறுவன இயக்குனர் சந்திரசேகர் வழங்கி உள்ளார். இதற்கு மாணவிகள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.