ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கியின் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியவில்லை என்றும், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ யோனோ செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா:
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியவில்லை என்று அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துளள்னர். கூடுதலாக, எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியான யோனா செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். மாதத்தின் முதல் வாரம் இது போன்ற கோளாறுகளால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
வங்கியின் செயலியான யோனா செயலியில் லாகின் கூட செய்யமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அது error என்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே போல் மற்ற வங்கியின் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கின் வாடிக்கையாளர்களுக்கு பணத்தினை அனுப்ப முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு – தமிழக அரசியலில் பரபரப்பு!!
வங்கியின் மேலிடம் இந்த பிரச்சனைகளை உடனடியாக அறிந்து இதற்கு தீர்வினை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து வங்கி நிர்வாகம் கூறுகையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தான் இது போன்ற சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும், அதனை சரி செய்ய தங்கள் சார்பில் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.