வங்கிக்கு செல்லாமல், ஆன்லைனில் வழியாக வங்கி கணக்கு தொடங்குவது குறித்த புதிய திட்டம் ஒன்றை எஸ்பிஐ வங்கி, தங்கள் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டம்:
பெரும்பாலான மக்கள், அதிகம் பயன்படுத்தும் சேவைகளில் ஒன்று வங்கி சேவை. இந்த வங்கியில் என்னதான் ஆன்லைன், பரிவர்த்தனைகள் வந்தாலும் புதிதாக கணக்கு தொடங்க வங்கி கிளையை அணுக வேண்டி இருந்தது. தற்போது அதனை மாற்றி, எஸ்பிஐ வங்கியில் ஆன்லைனில் புதிய கணக்கு தொடங்கும் KYC திட்டத்தை, வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடங்க, நீங்கள் YONO என்ற விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.
பின் சேமிப்பு கணக்கு என்பதை கிளிக் செய்து, ” வித் அவுட் கிளை விசிட் ” என்ற விருப்பத்தை தேர்வு செய்து, உங்கள் விவரங்களை உள்ளிட வேண்டும். பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும், ஓடிபியை உள்ளிட்டால் உங்களுக்கு புதிய கணக்கு தொடங்கப்படும். உங்களுக்கு இந்த கணக்கின் மூலம், காசோலை மற்றும் பாஸ்புக் வேண்டுமென்றால் நீங்கள் கிளையை அணுகி வாங்கிக் கொள்ளலாம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த கணக்கு தொடங்கப்பட்டதும் உங்களுக்கு ரூபி கிளாசிக் கார்டு வழங்கப்படும். விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், உங்களின் ஆன்லைன் கணக்கு செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் புதிய கணக்கு தொடங்க மணிக்கணக்கில் வங்கியில் பயனர்கள் நிற்க வேண்டியதில்லை.