சனிக்கோள் இன்று (02 ஆகஸ்ட் 2021) இரவு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மேலும் இன்று இரவு வானில் சனிக்கோளை வெறும் கண்களால் பார்க்கமுடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது பால் வழி அண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் பெரும்பாலும் பூமியின் வடிவிலே காணப்படுகின்றன. அவ்வாறு சூரியனை சுற்றி வரும் எட்டு கோள்களில் ஒன்று சனிக்கோள். ஆண்டுக்கு ஒருமுறை நாம் வாழும் பூமியும் சனிக்கோளும் மிக நெருக்கமாக சந்தித்து கொள்கின்றன.
கடந்த ஆண்டு இந்த அதிசய நிகழ்வு ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த இந்நிகழ்வு இந்த ஆண்டு இன்று நடைபெறவுள்ளது. மக்கள், பூமி மற்றும் சனி கிரகத்தின் சந்திப்பை வெறும் கண்ணில் இரவு வானில் காணலாம். மேலும் சாதாரண பைனாகுலரை பயன்படுத்தி சனிக்கோளின் வளையத்தைக் காணலாம்.
வெறும் கண்களால் சனிக்கோளை பார்க்கும் போது அது சிறிய விண்மின் போல தெரியும் என்றும் அதே சமயம் நவீன தொலைநோக்கி மூலம் பார்த்தால் வளையத்துக்கும் சனிக்கோளுக்கும் இடையே உள்ள இடைவெளியை பார்க்கலாம் என்றும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்