சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கடையை திறந்து வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சிபிசிஐடி விசாரித்து வரும் இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு – முதல்வர் அறிவிப்பு!!
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்த போது, அவர் தான் ஒரு அமைச்சரின் சொந்தக்காரர் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த அமைச்சர் தூத்துக்குடியைச் சேர்ந்த கடம்பூர் ராஜு என தகவல்கள் பரவியது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த, அமைச்சர் தனக்கும் ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வேணும் என்றே சில விஷமிகள் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர் என தெரிவித்தார்.