SAT20: ஒரே போட்டியில் 25 பவுண்டரி, 15 சிக்ஸர் விளாசிய சூப்பர் ஜெயண்ட்ஸ்…, மிரண்டு போன எதிரணி!!

0
SAT20: ஒரே போட்டியில் 25 பவுண்டரி, 15 சிக்ஸர் விளாசிய சூப்பர் ஜெயண்ட்ஸ்..., மிரண்டு போன எதிரணி!!
SAT20: ஒரே போட்டியில் 25 பவுண்டரி, 15 சிக்ஸர் விளாசிய சூப்பர் ஜெயண்ட்ஸ்..., மிரண்டு போன எதிரணி!!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடரில், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

SAT20:

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை போல, தென் ஆப்பிரிக்காவில் SA20 லீக் தொடர் கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் உள்ளிட்ட 6 அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், நேற்று, பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை எதிர்த்து, டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்திருந்தார். இதையடுத்து, முதலில் பேட் செய்த டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 25 பவுண்டரி, 15 சிக்ஸர் உட்பட 254 ரன்களை எடுத்திருந்தது.

காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள்…, பார்டர் கவாஸ்கர் டிராபியிலிருந்து விலகல்??

இதில், ஹென்ரிச் கிளாசென் 44 பந்தில் 10 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 104* ரன்களை குவித்திருந்தார். இந்த கடினமான இலக்கை துரத்திய பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி, 103 ரன்களுக்குள்ளே சுருண்டது. இதன் மூலம், 151 ரன்கள் வித்தியாசத்தில் டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அபாரமாக வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற இந்த தொடரில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here