இபிஎஸ்-சசிகலா மோதல், அமைதி காக்கும் ஓபிஎஸ், தினகரன் – குழப்பத்தில் அதிமுகவினர்!

0

அதிமுக கட்சி யாருக்கு என்பதில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகியோருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் அமைதி காத்து வருகின்றனர்.

அதிமுக:

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பின் அதிமுக கட்சியில் பெரிய பிளவு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் சசிகலா என்றே சொல்லலாம். தொடக்க காலத்தில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் சேர்ந்து பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டிய நிலையில், சசிகலா சிறைக்கு சென்ற பின் எடப்பாடி பழனிசை மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து சசிகலாவை ஓரம் காட்டினர்.

பின் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பன்னீர்செல்வத்திற்கும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசைக்கும் வழங்கப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றது. தற்போது மீண்டும் இபிஎஸ் ஓபிஎஸ் மத்தியில் புதிய பிரச்னை கிளம்பியது. அவர்கள் இருவருக்கும் இடையில் எதிர் கட்சி தலைவர் யார் என்று போட்டி நிலவியது.

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பரவும் அபாயம் – இ-பாஸ் நடைமுறையால் ஆபத்து!!!

முடிவாக இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றார். இந்நிலையில் சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். இந்த பணியில் அவர் தினகரனை ஓரங்கட்டியுள்ளார். மேலும் தற்போது அமமுக கூடாரத்தை காலி செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசியல் களம் தற்போது சூடுபிடித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் இந்த சூழலில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் அமைதி காத்து வருகின்றனர். இதனால் அதிமுகவினர் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here