சசிகலாவை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை – அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடி!!

0

சிறையில் இருந்து விடைபெற்ற சசிகலா தற்போது தேர்தலில் இருந்தும் விலகியுள்ளார். இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க பரிசீலனை நடத்தப்படும் என்று அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதிமுக:

சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் சிறையில் இருந்து வெளியானார். மேலும் அவர் உடல்நல குறைவால் பாதிக்கப்ட்டு பெங்களுருவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து சிறிது ஓய்வு பெற்ற பின்பு அவர் கடந்த மாதம் தமிழகத்திற்கு வருகை தந்தார். அவர் தமிழகத்திற்கு வருகை தரும் பொழுதே பல பிரச்சனைகளை கிளப்பி வந்தார். அதில் ஒன்று தான் சசிகலா அதிமுக கொடி பறக்கவிடப்பட்ட காரில் வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தமிழகத்தில் அதிமுகவினர் கொதித்தனர். தமிழகம் வந்த சசிகலா தினகரனுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளர் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்த ஓர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுவே இன்னும் முடியல, அதுக்குள்ள மரபணு மாறிய கொரோனவா??சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

இதுகுறித்து அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியதாவது, அதிமுக கட்சியில் சசிகலா சேர வேண்டும் என்றால் தற்போது உள்ள அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும். அப்படி செய்தால் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு பரிசீலனை செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இவர்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது சசிகலா விரைவில் அதிமுகவில் இனைந்து விடுவது போல் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here