தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு நாளடைவில் எக்கச்சக்கமாக வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. நாயகனாக பல படங்களில் கலக்கி வந்தார்.
மேலும் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சினிமாவில் ஒரு கட்டத்திற்கு முன்னேறிய போதே அவர், சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பிறகு தான், ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ராதிகாவிற்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது தனது சரத்குமார் ராதிகாவின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளாகிய ரேயானுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். என்னதான் குடும்பம் வேறயா இருந்தாலும், எல்லார் கூடயும் ஒற்றுமையா இருக்கீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.