தமிழ் திரையுலகில் 80ஸ் காலமாகட்டும் 90ஸ் காலமாகட்டும் நம்பர் 1 ஹீரோவாக திகழ்ந்தவர் சரத் குமார். இவர் நடித்த சூர்ய வம்சம், நாட்டாமை என பல படங்கள் 100 நாட்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டன. பொதுவாகவே ரஜினி, கமல் தவிர 60 வயதை தாண்டிய ஹீரோக்கள் சினிமா உலகில் நிலைப்பது கடினம்.
இந்நிலையில் 67 வயதாகும் சரத் குமார் தற்போது முக்கிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இதில் இவரின் மனைவியாக சுகாசினி நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்குவது இயக்குனர் திருமலை பாலுச்சாமி. மேலும் இப்படத்திற்கு சமரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பிற கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சரத் குமார், சுகாசினி ஆகியோருடன் தொரட்டி பட புகழ் நந்தா, சிங்கம் புலி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் நாயகன் கதாபாத்திரத்தில் நடிகர் சரத் குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில படங்கள் நடித்து விட்டு மார்க்கெட்டை இழக்கும் நடிகர்கள் மத்தியில் சரத் குமார் இன்றும் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்