விஜய் டிவியில் பிரபல நடிகையாக வலம் வந்த சரண்யா துராடி தற்போது தனது காதலனுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சரண்யா துராடி:
செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் தான் சரண்யா. 4 ஆண்டுகள் வரை தனது வேலையை சிறப்பாக செய்ததற்காக விருதையும் பெற்றிருந்தார். சில காலத்திற்கு பிறகு லண்டன் சென்றிருந்த இவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இதனால் இவர் மீண்டும் தமிழ்நாட்டில் கால் எடுத்து வைத்தார்.
அவருக்கு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் அமித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த சீரியல் மூலம் சிறந்த புதுமுக நடிகை என்ற விருதை தட்டி சென்றார். அந்த சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ரன் சீரியலில் நடித்து கலக்கினார், ஆனால் அதிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் ஆயுத எழுத்து சீரியல் மூலம் விஜய் டிவிக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த சீரியல் அவர் நினைத்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.
அதன் பிறகு அவரை சின்னத்திரையில் பார்க்க முடியாமல் போனது. இந்நிலையில் அவர் தன் காதலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியின் தரிசனத்தை பார்த்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்