காதலனுடன் ஒரே பனியனில் நெருக்கமாக இருக்கும் விஜய் டிவி நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

0

சித்ராவின் நெருங்கிய தோழியும், விஜய் டிவியில் பிரபல நடிகையுமான சரண்யா துராடி காதலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சரண்யா துராடி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் சரண்யா துராடி. சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டார் சரண்யா. மேலும் பல ‘டிக் டாக்’ வீடியோ மூலம் ரசிகர்களை அவர் பக்கம் கவர்த்திழுத்தார். அதன் பிறகு அவருக்கு சன் டிவியில் வெளியான ரன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

saranya
saranya

ஆனால் பாதியிலேயே அந்த சீரியலில் இருந்து விலகி விஜய் டிவியில் வெளியான ‘ஆயுத எழுத்து’ என்ற சீரியலில் கமிட்டானார். அந்த சீரியலும் தற்போது முடிவடைந்தது. மேலும் இவரும் சில மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட சித்ராவும் நெருங்கிய தோழிகள். சித்ரா கூட கடைசி நேரத்தில் இவருடன் எடுத்துக்கொண்ட வீடியோ வைரலானது.

சித்ராவும் இவரும் சேர்ந்து செய்த ரீலிஸ் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க சரண்யாவை தான் ரசிகர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அதனை அவர் மறுத்து விட்டார். சரண்யா பல வருடங்களாக ஒருவரை காதலித்து வந்தது நம் அனைவர்க்கும் தெரியும். அவரே தனது காதலனின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

மேலும் வித்தியாசமான போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் உள்ளவர் சரண்யா. ஏற்கனவே கடலுக்கடியில் காதலனுடன் போட்டோஷூட் நடத்தி இருந்தார் சரண்யா. அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது. தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியுட்டுள்ளார். அதாவது ஒரே பனியனில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here