சின்னத்திரை நடிகையான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதில் சரண்யா துராடி நடிக்க போகிறார் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானவர் சித்ரா. இந்த சீரியலில் சித்ரா முல்லையாகவே வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம். இவர் தற்கொலை செய்துகொண்டதை யாராலுமே தாங்கிக்கொள்ள முடியவில்லை. சித்ரா இறந்து 2 நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மக்கள் மத்தியிலும் அவர் அவர் இறந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பிக்கொண்டு தான் உள்ளனர். அவரின் டிக்டாக் விடீயோக்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. இந்த சிரித்த முகத்தை திரும்பவும் பார்க்கவே முடியாதா?? என்று பலரும் கதறி வருகின்றனர்.
சித்ராவின் இறுதி சடங்கிற்கு கூட கூட்டம் அலைமோதியது. இத்தனை நாட்கள் சித்ராவின் கடின உழைப்பு கிடைத்த வெற்றியே இந்த மக்கள் கூட்டம். சித்ராவை இதுவரையிலும் அனைவரும் தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்த்து வந்தனர். ஜெயா டிவியில் ஆரம்பித்த இவரின் பயணம் பாண்டியன் ஸ்டோர்ஸில் முடிவடைந்துள்ளது.
இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதில் யார் நடிப்பார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் சித்ராவின் நெருங்கிய தோழியான சரண்யா நடிக்க இருப்பதாக கூறி வந்தனர். இந்நிலையில் சரண்யா அதனை மறுத்து பதிவிட்டுள்ளார். அதாவது முல்லை கதாபாத்திரத்தில் தான் நடிப்பது என்பது சாத்தியமற்றது.
சித்ரா அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். என கூறியுள்ளார். மேலும் பலரும் முல்லை கதாபாத்திரத்தை சாகடித்து விடுமாறு கமெண்டில் கதறி வருகின்றனர். ஆனால் இந்த சீரியலை தொடர வேறு ஒருவரை நடிக்க வைத்து தான் ஆக வேண்டும் என நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்த சீரியலில் யார் நடிப்பார்?? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.