என்ன சார் பயம் வந்துடுச்சா?? கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரபல நடிகர்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகரான சந்தானம் கொரோனவிற்கான தடுப்பூசியை போட்டுள்ளார்.

சந்தானம்:

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு சுமார் 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கொரோனவை தடுப்பதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மக்களை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது கொரோனா பரவலை குறைப்பதற்கு நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும் கூட நாட்டில் அதிகமான அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தாலும் அதே மாதிரி கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.

santhanam
santhanam

பாகத்தானே போறீங்க என்னோட ஆட்டத்த – ஷகிலா அதிரடி பேட்டி!!

அதற்கான புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முழு நேர நடிகராக அவதாரம் எடுத்துள்ள சந்தானம் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இவர் பல நாட்களுக்கு பின்பு தடுப்பூசியை செலுத்தியுள்ளதால் நெட்டிசன்கள் சிலர் கொரோனா பயம் வந்துவிட்டதா என்று கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here