ஒன்று சேர்ந்த பரம எதிரிகள்.., ஜடேஜா வெளியிட்ட புகைப்படைத்தால் வெளிவந்த ரகசியம்!!

0

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவும், வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கரும் எதிரிகளாக இருந்த நிலையில், அவர்களது பிரெண்ட்ஷிப்பை குறிக்கும் வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவீந்திர ஜடேஜா

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தற்போது முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சையின் காரணமாக இவரால் தற்போது T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஓய்வில் இருக்கும் ஜடேஜா தற்போது சமூக வலைத்தளத்தில் பொழுதை செலவிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் ஜடேஜா தனது பேஸ்புக் ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியினை போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் கேபிஷனில் எனது நண்பரை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த மஞ்சரேக்கர், நீங்க விரைவில் சரியாகி மைதானத்தில் விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கேன் என தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

ஏனென்றால் ஜடேஜாவும், சஞ்சய் மஞ்சரேக்கரும் இதுவரை எதிரிகளாக இருந்தார்கள். அதற்கு காரணம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் ஜடேஜாவை, ஒரு சாதாரண துகள்கள் போன்ற வீரர் என மஞ்சரேக்கர் குறிப்பிட்டார். இதனால் இருவருக்கும் இடையில் மைதானத்திலே வாக்குவாதம் நடந்தது. அதன் பிறகு பல வருடங்களாக இவர்கள் பேசவில்லை. இந்நிலையில் தான் இவர்கள் நட்பை குறிப்பிடும் படி இந்த ட்விட்டர் பதிவு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here