இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் ரகசிய பதிவு ஒன்று இவரது, ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சானியா மிர்சா:
இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரமாக திகழ்பவர் சானியா மிர்சா. இவருக்கும், இவரது கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் இடையே சமீபகாலமாக ஏதோ பிரச்சனைகள் உள்ளதாக வதந்திகள் பரவி வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து இருவரிடம் இருந்தும் எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சமீபத்தில், இவர்களது 4 வயது மகன் இஷான் பிறந்த நாளை இருவரும் இணைந்து கொண்டாடியதற்கு அடையாளமாக, சோயப் மாலிக் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் கேப்சனில், சானியா மிர்சாவை புறக்கணித்து விட்டு, தன் மகனை மட்டும், உன்னை தினமும் சந்திக்க முடியவில்லை. ஆனால், உன்னுடைய சிரிப்பை ஒவ்வொரு நொடியும் நினைத்து கொண்டுதான் உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவு ரசிகர்களுடைய குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சானியா மிர்சாவின் இன்ஸ்டா, ரகசிய ஸ்டோரியை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இதில், உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன அல்லாஹ்வைக் காண என இருந்தது. இந்த பதிவானது, சோயப் மாலிக்-சானியா மிர்சா இடையே விவாகரத்து ஆக போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. மேலும், இவரது ரசிகர்களையும் இந்த பதிவு கவலை அடைய செய்துள்ளது. ஆனால், இது குறித்து உண்மையான தகவல் இவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.