நாளை முதல் தொடங்க உள்ள, மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் RCB அணியை வழி நடத்துவதற்காக அணியில் இணைந்துள்ளார்.
சானியா மிர்சா:
இந்தியாவில், மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) தொடரின் முதல் சீசன் நாளை முதல் மும்பையில் தொடங்க உள்ளது. 5 அணிகள் பங்கு பெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து மோத உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள அணியாக ஸ்மிருதி மந்தனா தலைமையிலான RCB அணி திகழ்கிறது. இதில், RCB அணியானது, மார்ச் 5ம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த RCB அணியின் வழி காட்டியாக (மென்டர்) இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா நியமிக்கப்பட்டு இருந்தார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ரஷ்ய வீரரை எதிர்கொள்ளும் நோவக் ஜோகோவிச்!!
சமீபத்தில் துபாய் டென்னிஸில் விளையாடி தனது சர்வதேச போட்டிக்கான ஓய்வினை அறிவித்த இவர், தற்போது, RCB அணியுடன் இணைந்துள்ளார். இவரது, வழிகாட்டுதலின் கீழும், ஸ்மிருதி மந்தனா தலைமையின் கீழும் RCB அணியானது இந்த WPL தொடரின் முதல் சீசனை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.