இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாச மெசேஜ் செய்யும் நபர் – போலீசில் புகார் அளித்த பிக் பாஸ் பிரபலம்!!!

0

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சனம் ஷெட்டி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து ஆபாச மெசேஜ் வருவதால் போலீசில் தற்போது மெசேஜ் செய்த அந்த நபர் பற்றி புகார் அளித்துள்ளார்.

சனம் ஷெட்டி, இவர் மாடலிங் துறையிலிருந்து சினிமாவிற்குள் குதித்தவர். இவர் 2016-ஆம் ஆண்டில் மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினை வென்றுள்ளார். இவர் தமிழில் கதா நாயகியாக அறிமுகமாகிய படம் அம்புலி. சினிமாவில் வாய்ப்புகள் வராததால் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டார். தன் மனதில் தோன்றியதை வெளிப்படையாகவும் நியாயமாகவும் பேசியதால் மக்களின் ஆதரவு இவருக்கு அதிகரித்தது.

இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவருக்கு வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஒரு நபரிடம் ஆபாச மெசேஜ் வருவதாகவும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் அந்த வாட்ஸ்-அப் எண்ணையும், பிற ஆதாரங்களையும் சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here