தனது நடிப்புத் திறமையால் திரை உலகத்தில் முன்னனி இடத்தை பிடித்தவர்களில் ஒருவர் நடிகை சமந்தா அவர்கள். அவர் தற்போது தன்னுடைய நாய் குட்டியுடன் துள்ளி குதித்து செம குஷியாக பலூன் விளையாடும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
தமிழில் ஒரு துணை நடிகையாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை சமந்தா அவர்கள். அதன் பிறகு பல படங்களில் பல ஹிட் ஹீரோக்களுடன் நடித்து புகழ் அடைந்து உள்ளார். மேலும் இவர் சூர்யா உடன் நடித்த அஞ்சான் படத்தில் சூர்யாவை பார்த்து அவர் சொல்லும் ‘நீ நிதானமா இல்ல…உன் கால் தரையில படல’ என்ற இந்த வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒன்று. மேலும் தமிழை தவிர்த்து இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதன்யா அவர்களை திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார். இருப்பினும் மீண்டும் படங்களில் நடிக்க மாட்டார் என நினைத்த வேளையில் திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பை தொடர்ந்தார். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய குட்டி நாய் உடன் மிக குதூகலமாக துள்ளி குதித்து ஒரு குழந்தை போல பலூன் விளையாடுகிறார். தற்போது அந்த வீடியோவை அவரின் ரசிகர்களை மிகுந்த அளவில் ஈர்த்து உள்ளது. மேலும் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்