தொடர்ந்து காதல் மற்றும் ஆக்ஷன் திரைப்படங்களிலேயே நடிக்க ஆர்வம் காட்டி வந்த சமந்தா தற்போது முதன்முறையாக பேய் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ரசிகர்களும் இந்த செய்தியை கேட்டு எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பேயாக சமந்தா
தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் சமந்தா முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார். அதாவது, தற்போது ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் யசோதா என்னும் பான் இந்தியா திரைப்படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். கூடிய விரைவில் இந்த யசோதா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகிவரும் ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றிலும் சமந்தா நடித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து அமர் கவுசிக் இயக்கத்தில் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். இதுவே ஹிந்தியில் சமந்தா அறிமுகமாகும் முதல் திரைப்படம் ஆகும். அதாவது இந்த திரைப்படத்தில் சமந்தா இரட்டை கதாபாத்திரத்தில் அதாவது இளவரசியாகவும், பேயாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான பயிற்சியில் சமந்தா ஈடுபட்டு வருவதாகவும் சமூக வலை பக்கங்களில் தகவல் கிடைத்துள்ளது.