சமந்தாவை பார்த்தால் இதான் செய்வேன் – பகிரங்கமாக பேசிய மாஜி கணவர் நாக சைதன்யா!!

0
சமந்தா பற்றி நாக சைதன்யாவிடம் போட்டுக்கொடுத்த மேனேஜர் - உடனடியாக கழட்டிவிட்டு சமந்தா!
சமந்தாவை பார்த்தால் இதான் செய்வேன் - பகிரங்கமாக பேசிய மாஜி கணவர் நாக சைதன்யா!!

பாலிவுட்டில்  புகழ் பெற்ற காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைதன்யா, தனது மாஜி மனைவி சமந்தா குறித்து பகிரங்கமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

 நாக சைதன்யா கருத்து:

தெலுங்கு சினிமாவில், முன்னணி ஹீரோவான நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இடையிலான திருமண உறவு 4 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்தது. தற்போது விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா, மிகவும் கிளாமராக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காபி வித் கரண் என்று ரியாலிட்டி நிகழ்ச்சியில் அக்ஷய் குமாருடன் கலந்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது, அவரிடம் நாக சைதன்யா உடன் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டது . இதற்கு பதில் அளித்த சமந்தா, அந்த அறையில் கூர்மையான பொருட்கள் மறைத்து வைக்கப் பட வேண்டும் என பதிலளித்தார்.

இதே போல், நாக சைதன்யா விடமும் சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில், அளித்த அவர் ஹாய் சொல்லி அவரை கட்டிப் பிடிப்பேன் என பதில் சொன்னார். இந்த கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here