தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் உடலை பிட்டாக வைத்திருக்கும் அவர், சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு செலுத்தும் சமந்தா, தான் வளர்க்கும் நாய் உடன் எடுத்து வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சமந்தா
மாடலிங் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து பிரபலமடைந்தவர்களில் முக்கியமானவர் சமந்தா. ஆரம்ப காலத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சமந்தா, பானா காத்தாடி படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதற்கு முன்னர் சிம்பு நடிப்பில் செம ஹிட் அடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திலும் சில காட்சிகளில் தோன்றுவார். நானி படம் அவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின்னர் விஜய், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். கத்தி, மெர்சல் என வரிசையாக இவரது படங்கள் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் ராசியான நடிகையாக மாறினார்.
தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உயர்ந்த சமந்தா, தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து அசத்தினார். பின்னர் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட அவர், சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!
பல நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விடும் நிலையில், சமந்தா தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு போட்டியான கதாநாயகியாக வலம் வருகிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டினுள் முடங்கி இருக்கும் சமந்தா ஷாகி என்ற பெயரில் புதிய தொழில் தொடங்கி உள்ளார். மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.